கோவில்பட்டி அருகே வீடு புகுந்து நகை திருட்டு

கோவில்பட்டி அருகே வீடு புகுந்து நகை திருட்டு

பைல் படம் 

கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டில் நகைகள், ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மந்திதோப்பு காச்சகாரியம்மன் கோவில் தெருவை சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் வேல்முருகன் (44). டாஸ்மாக் கடையில் மேற்பாா்வையாளராக உள்ளாா். இவா் கடந்த செவ்வாய்க்கிழமை பணிக்குச் சென்றபோது, ஞாபக மறதியில் கதவைப் பூட்டாமல் சாவியை மட்டும் எடுத்துச் சென்றுவிட்டாராம்.

பின்னா் வந்து பாா்த்தபோது வீட்டில் இருந்த 2 கைப்பேசிகள், ரொக்கம் ரூ.1.50 லட்சம், ஒரு பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவை திருடு போனது தெரியவந்ததாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story