மழையால் வீடு இடிந்து சேதம் - சரவணன் எம்எல்ஏ நிதி உதவி

மழையால் வீடு இடிந்து சேதம் - சரவணன் எம்எல்ஏ நிதி உதவி

நிதி உதவி 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பானம்பட்டு கிராமத்தில் ரூபாவதி என்பவரின் வீடு மழையில் இடிந்து சேதமானது. சேதமடைந்த வீட்டை பெ.சு. தி.சரவணன் எம்எல்ஏ பார்வையிட்டு ரூபாவதி பாலசுப்ரமணி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ரூபாவதிக்கு தமிழக அரசு வழங்கும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் உடனடியாக வீடு வழங்க வேண்டும், தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் நிவாரண உதவியும் உடனடியாக வருவாய் துறை மூலம் வழங்க வேண்டும், மேலும் இவருடைய குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் உணவு வசதி அனைத்தும் உடனுக்குடன் செய்து கொடுக்க வேண்டும், மழையில் வீடு சேதம் ஆனதால் அவர்கள் தங்குவதற்கு உடனடியாக மாற்று இடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கூறினார்.

பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி தனது சொந்த நிதியில் அடிப்படை தேவைக்கு பெ.சு.தி.சரவணன், எம்எல்ஏ நிவாரணமும் வழங்கினார். ஆய்வின்போது ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அ.சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் க.சுப்பிரமணியம், தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சுசிலா முருகன், பிச்சாண்டி, பஞ்சாயத்து தலைவர் பாஞ்சாலை, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story