செங்கம் அருகே சூறாவளி காற்றில் வீடு சேதம்

செங்கம் அருகே சூறாவளி காற்றில் வீடு சேதம்

சேதமடைந்த வீடு

செங்கம் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் குடிசை வீடு முற்றிலும் சேதமடைந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.கனமழையால் கட்டமடுவு ஊராட்சி அயோத்திபட்டணம் கிராமத்தில் சரவணன் -கண்ணாத்தா என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது.

குடிசைக்குள் இருந்த பொருட்கள் முழுவதும் சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி வெங்கட்ராமன் நேரில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரணம் பெற்று தருவதாக ஆறுதல் தெரிவித்தார்.

Tags

Next Story