கனமழையால் வீடு சேதம் - பேருந்து நிலையத்தை வசிப்பிடமாக்கிய தம்பதி

கனமழையால் வீடு சேதம் - பேருந்து நிலையத்தை வசிப்பிடமாக்கிய தம்பதி

கேரள தம்பதி 

கூடன்குளம் அருகே கனமழையால் வீட்டை இழந்த கேரளா தம்பதி கூடங்குளம் பேருந்து நிலையத்தை வசிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். சேதமடைந்த வீட்டை மாவட்ட நிர்வாகம் சரிசெய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17,18 ஆம் தேதிகளில் பெய்த கன மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்ததில் பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்புக்கு உள்ளாகியது.அந்த வகையில் கூடன்குளம் அருகே கனமழையால் வீட்டை இழந்த கேரளா தம்பதிகள் கூடங்குளம் பேருந்து நிலையத்தில் தூங்கி வருகின்றனர். இந்த தம்பதிகள் தங்களது வீடுகளை மாவட்ட நிர்வாகம் சரி செய்து தருமாறு கோரிக்கையும் விடுத்துள்ளனர். பேருந்து நிலையத்தில் தூங்கும் இந்த தம்பதிகளின் சம்பவம் பார்ப்பவர்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags

Next Story