தீ விபத்தில் வீடு சேதம் - எம்.எல்.ஏ, மேயர் ஆறுதல்
பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு மேயர் ஆறுதல்
திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டு பாண்டியன் நகர் பகுதிக்குட்பட்ட அறிவொளி நகரில் ஒருவரின் இல்லம் தீ விபத்துக்குள்ளான செய்தியை அறிந்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தீ விபத்துக்குள்ளான வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டு அக்குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கி ஆறுதல் கூறினர். தீயில் எரிந்த அனைத்து படிவங்கள் மற்றும் அரசு அட்டைகளை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பகுதி கழகச் செயலாளர் ஜோதி , மண்டல தலைவர் கோவிந்தராஜ் ,மாமன்ற உறுப்பினர்கோபால்சாமி,ராதாகிருஷ்ணன்,வட்ட கழக செயலாளர் கஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
Next Story