ஆட்சியர் அலுவலக வளாக உணவகத்தில் வீட்டு சிலிண்டர் பயன்பாடு

ஆட்சியர் அலுவலக வளாக உணவகத்தில் வீட்டு சிலிண்டர் பயன்பாடு

வீட்டு சிலிண்டர் 

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழு சிற்றுண்டி உணவகத்தில் வீட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய சிற்றுண்டி உணவகத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். இதில் கடைகளுக்கு பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டரை பயன்படுத்தாமல், வீட்டிற்கு பயன்படுத்தும் சிலிண்டரில் சமையல் செய்தனர். இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பங்கேற்றும் இதனை கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.

Tags

Next Story