எச்.ராஜா பேசியபோது தூங்கி விழுந்த பாமக வேட்பாளர்

செங்கல்பட்டில் நடந்த பாஜக செயல்வீரர் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எச்.ராஜா பேசியபோது பாமக வேட்பாளர் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பாஜக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் செங்கல்பட்டு அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக எச். ராஜா கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார். மேடையில் எச். ராஜா பேசிக் கொண்டிருந்தபோது பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் மேடையில் தூங்கிய சம்பவம் நிகழ்வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags

Next Story