அ.தி.மு.க சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் போதைப் பொருள் அதிகரித்து வருவதை கண்டித்து பரமத்தி வேலூர் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க வினர் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தமிழகத்தில் போதைப் பொருள் அதிகரித்து வருவதை கண்டித்து பரமத்தி வேலூர் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க வினர் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. அதனை கண்டித்து அ.தி.மு.க சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் பரமத்தி வேலூர் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் அ.தி.மு.க நகர செயலாளர் பொன்னி வேலு(எ) வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களை பாதுகாக்கவும்,இளைஞர்களை பாதுகாக்கவும்,போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என தமிழக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.கவை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல் பொத்தனூரில் நகர செயலாளர் நாராயணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story