போதை பொருள் தடுப்பு குறித்த மனித சங்கிலி

போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

திருச்சி இன்னர் வீல் கிளப் மற்றும் பிஷப்ஹூபர் கல்லூரியின் இளைஞர்களுக்கு எதிரான போதை இயக்கம் ஆகியவை இணைந்து SAY NO TO DRUGS என்ற விழிப்புணர்வு மனித‌ சங்கிலி நிகழ்ச்சி திருச்சி இன்னர் வீல் கிளப் தலைவி ஷோபனா மகேந்திர குமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை திருச்சி வடக்கு சரக காவல்துறை துணை ஆணையர் அன்பு துவக்கி வைத்தார். இதில் ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி, சிவானி கல்லூரி, தேசியக் கல்லூரி மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் போதையை தவிர்ப்போம் என்று விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் பதாகை மற்றும் விழிப்புணர்வு முகமூடி அணிந்து மனித சங்கிலியாக நின்றனர்.

Tags

Next Story