மின் கட்டண உயர்வை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

ஓசூரில் மின் கட்டண உயர்வை எதிர்த்து சிறு குறு தொழிற்சங்கங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
ஓசூரில் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் ஓசூர் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்கம் சார்பில் மின் கட்டண உயர்வை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஓசூரில் முதல் சிப்காட் ஜங்ஷன் முதல் முத்து மாரியம்மன் கோயில் பகுதி, சீதாராம் மேடு, ஓசூர் சிறு குறு நடுத்தர தொழில் சங்க அலுவலகம், 2வது சிப்காட் வரை சுமார் 7 கிமீ தூரத்திற்கு 500க்கும் மேற்பட்ட தொழில்துறையை சேர்ந்தவர்கள் மனித சங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் உயர்த்தப்பட்ட நிலை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், பீக் ஹவர் சார்ஜை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் இன்னும் 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்த கூடாது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது.

Tags

Next Story