திமுக அரசைக் கண்டித்து, மனிதச் சங்கிலிப் போராட்டம்

திமுக அரசைக் கண்டித்து, மனிதச் சங்கிலிப் போராட்டம்

திண்டுக்கல் மாவட்ட அதிமுக சாா்பில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து, மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.


திண்டுக்கல் மாவட்ட அதிமுக சாா்பில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து, மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட அதிமுக சாா்பில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து, மனிதச் சங்கிலிப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்-திருச்சி சாலை, தலைமை தபால் நிலையம், நாகல் நகா், பேகம்பூா் பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்துக்கு அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மட்டுமன்றி, தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தும், தோதல் ஆணையத்தில் புகாா் அளித்தும் இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது. அதற்கான முயற்சியில் யாா் ஈடுபட்டாலும் வெற்றி பெற முடியாது என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Tags

Next Story