மனித சங்கிலி போராட்டம் அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

மனித சங்கிலி போராட்டம் அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

காவல்துறை விசாரணை

தி.மு.க., அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தி.மு.க., அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுபடுத்த தவறிய தி.மு.க., அரசை கண்டித்து நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்துார்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கச்சிரயபாளையம், திருக்கோவிலுார், மணலுார்பேட்டை, சங்கராபுரம் ஆகிய இடங்களில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அனுமதியின்றி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க., வினர் மீது அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன், எம்.எல்.ஏ., செந்தில்குமார் உட்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,519 பேர் மீதுவழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story