அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம்

அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர் 

திருச்சியில் செவ்வாய் கிழமை அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமாரின் ஆலோசனையின் படி பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடிய பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆலோசனைக்கிணங்க சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி இளம் தலைமுறையை சீரழித்து வருவதையும், போதை பொருட்கள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ள விடியா திமுக அரசை கண்டித்து‌ வரும் 12-03-2024 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று, காலை 10.00 மணியளவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட லால்குடி நகரம், பூவாளூர் பேரூர், புள்ளம்பாடி பேரூர், கல்லக்குடி பேரூர், மற்றும் துவாக்குடி நகர கழகம், கூத்தைப்பார் பேரூர், பொன்மலை பகுதி, அரியமங்கலம் பகுதி, திருவெறும்பூர் பகுதி, மணப்பாறை நகரம், பொன்னம்பட்டி பேரூர் ஆகியவற்றில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் முன்பு மாபெரும் மனித சங்கிலி போராட்டம். நடைபெற உள்ளது.அதுசமயம் பொதுமக்கள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் மனித சங்கிலியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story