திருநகர் பகுதியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

திருநகர் பகுதியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

மனித சங்கிலி போராட்டம்

திருநகர் பகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் மனித சங்கிலி போராட்டம்.
மதுரை அருகே திருநகர் ஹார்லிப்பட்டி அருகே இன்று காலை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் போதை பொருட்கள் அதிகமாக இளைஞர்கள் பயன்படுத்துவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்தி எதிர்கால இந்தியாவை காப்பாற்ற போதை பொருள் விற்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள் ஆர்ப்பாட்டத்தில் முக்கிய அதிமுக நிர்வாகிகள்,சுமார் 700 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

Tags

Next Story