நெல்லிக்குப்பம்: மனித சங்கிலி போராட்டம்

நெல்லிக்குப்பம்: மனித சங்கிலி போராட்டம்

மனித சங்கிலி போராட்டம்

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் அண்ணா சிலை மும்முனை சந்திப்பில் அதிமுகவின் பொதுச் செயலாளர், மு. முதல்வர், சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கு இனங்க தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் அதிமுக நகர செயலாளர் கி. காசிநாதன் தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட எம். ஜி ஆர். மன்ற செயலாளர் நத்தம் கோபு (எ) ரகுராமன், மாவட்ட துணை செயலாளர் கௌரி பாண்டியன், மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story