மின் சிக்கனத்தை வலியுறுத்தி மனித சங்கிலி

மின் சிக்கனத்தை வலியுறுத்தி மனித சங்கிலி
மின் சிக்கனத்தை வலியுறுத்தி, தாம்பரம் பேருந்து நிலையத்தில் மனித சங்கிலி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
மின் சிக்கனத்தை வலியுறுத்தி, தாம்பரம் பேருந்து நிலையத்தில் மனித சங்கிலி விழிப்புணர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மின் சிக்கனத்தை வலியுறுத்தி, தாம்பரம் மின் கோட்டம் சார்பில், தாம்பரம் பேருந்து நிலையத்தில், கோட்ட பொறியாளர் அசோகன் தலைமையில், நேற்று காலை, மனித சங்கிலி விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தேவை இல்லாத இடத்தில் மின்சாரத்தை தவிர்த்து, இயற்கையை பாதுகாப்போம். மின்சாரத்தை அளவோடு பயன்படுத்த வேண்டும். ஒரு யூனிட் சேமிப்பு, இரண்டு யூனிட் உற்பத்திக்கு சமம் என்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். "

Tags

Next Story