சீர்காழி அருகே பழைய கழிவறை தொட்டியில் மனித இயல்பு கூடு

சீர்காழி அருகே பழைய கழிவறை தொட்டியில் மனித இயல்பு கூடு

மனித எலும்புக்கூடு

சீர்காழி அருகே வீட்டின் கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்ட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழி சாலை விரிவாக்க பணியின் போது கேசவன் என்பது வீடு இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது பழைய வீட்டின் கழிவறை தொட்டி அகற்றப்படாமல் புதிய வீட்டின் அருகே அமைந்துள்ளது.

இந்த கழிவறை தொட்டியில் மேல் மூடி திறந்து கிடந்த நிலையில் உள்ளே பார்த்தபோது மனித எலும்புக்கூடு கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பாகசாலை காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கழிவுநீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதை தஞ்சாவூர் தடவியல் நிபுணர் குழு நாளை ஆய்வு மேற்கொண்டு எலும்புக்கூடு ஆணா? பெண்ணா? என விசாரணையில் இறப்பின் காரணம் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story