கன்னியாகுமரி: மனித உரிமைகள் தின உறுதிமொழி

கன்னியாகுமரி: மனித உரிமைகள் தின உறுதிமொழி
உறுதி மொழி எடுத்த கலெக்டர்
அலுவர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் மனித உரிமை உறுதிமொழியினை இன்று ஏற்றுக்கொண்டார்கள். இந்த உறுதிமொழியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தபாலசுப்பிரமணியம், பத்மநாபபுர சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாசியர் தசேதுராமலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story