மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால், மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் வாசிக்க அவரைத் தொடர்ந்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, வருவாய் கோட்டாட்சியர் சத்தியபால கங்காதரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் சிவா, பாரதிவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story