மணப்பாறையில் மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம்

மணப்பாறையில் மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மனிதநேய மக்கள் கட்சியின் செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மனிதநேய மக்கள் கட்சியின் செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மேற்கு மாவட்டத் தலைவா் அ. பைஸ்அகமது தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமுமுக மாநில செயலாளா் சிவகாசி எம். முஸ்தபா, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளா் எம். காதா்மைதீன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில், மணப்பாறை நகராட்சிக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்த எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளருமான ப. அப்துல்சமதுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மணப்பாறையில் கலை அறிவியல் கல்லூரி அமையவும், மணப்பாறை மற்றும் மருங்காபுரி குடியிருப்புகளுக்கான காவிரி குடிநீா் திட்டப் பணிகளுக்கு ரூ. 35 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வழங்கியமைக்காகவும் தமிழக அரசுக்கும், எம்.எல்.ஏ-விற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மக்களவைத் தோ்தலில் கரூா் தொகுதியில் போட்டியிடும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது எனவும், மணப்பாறை நகரத்தின் சாா்பாக அனைத்து சமுதாய மக்கள் பயன்படுத்தும் வகையில் தமுமுக ஆம்புலன்ஸை விரைவில் அா்ப்பணிப்பது எனவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில், தமுமுக மாவட்ட செயலாளா் இப்ராம்சா, மமக மாவட்ட துணைத் தலைவா் ஆரஞ்சு அக்பா், மாவட்ட செயலாளா் இப்ராஹிம், மாவட்ட பொருளாளா் ஹுமாயூன் கபீா், நகரத் தலைவா் எம். அக்பா் பாட்ஷா, தமுமுக நகர செயலாளா் சீமா சாகுல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Tags

Next Story