இருளப்பபுரத்தில் பசுபதீஸ்வரர் கோவில் உண்டியல் உடைப்பு

இருளப்பபுரத்தில் பசுபதீஸ்வரர் கோவில் உண்டியல் உடைப்பு

உண்டியல் உடைக்கப்பட்ட கோவில்


நாகர்கோவில் இருளப்பபுரத்தில் பசுபதீஸ்வரர், பிரசன்னபார்வதி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கம். நேற்று சரசுவதி பூஜை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்தனர். வழிபாடுகள் முடிந்ததும் இரவில் கோவிலை அர்ச்சகர் பூட்டிச் சென்றார்.

இன்று காலை கோவிலுக்கு வழக்கம்போல் வந்தபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். மேலும் உண்டியலின் அருகே காணிக்கை சில்லறைகள் சிதறி கிடந்தன. அப்போது, உடைக்கப்பட்ட உண்டியலின் அருகே வாலிபர் ஒருவர் படுத்திருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது ஏதேதோ கூறி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து அந்த வாலிபரை, கோட்டார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர், புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதால் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story