காட்டுபன்றி என நினைத்து பசுமாட்டை சுட்ட வேட்டைக்காரர்கள்

காட்டுபன்றி என நினைத்து பசுமாட்டை சுட்ட வேட்டைக்காரர்கள்

பலியான பசு மாடு

திருவண்ணாமலை மாவட்டம், ஆன்டிப்பட்டி பகுதியில் காட்டுப்பன்றி என நினைத்து வளர்ப்பு மாட்டை சுட்டு வீழ்த்திய வேட்டைக்காரர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் , செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில் வனப்பகுதி அருகே உள்ள பூந்தமல்லி பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடச் சென்ற மர்ம கும்பல் வனப்பகுதி அருகே விவசாய நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கொம்பு இல்லாத கருப்பு பசுமாட்டை பன்றி என நினைத்து துப்பாக்கியால் சுட்டதில் ராஜவேலு என்பவருக்கு சொந்தமான பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.

இது சம்பந்தமாக வனச்சரக அலுவலர் பழனிச்சாமி தலைமையிலான வனத்துறையினர் தீவிரமாக வேட்டைக்காரர்களைதேடி வருகின்றனர். இதுகுறித்து மேல் செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story