நகை திருடிய கணவன் மனைவி அதிரடி கைது

நகை திருடிய கணவன் மனைவி அதிரடி கைது

காவல்துறை 

திருநெல்வேலியில் நகை திருடிய கணவன் மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி சிவகாமிபுரம் பகுதியை சேர்ந்த பாரத் சிவராம் என்பவரின் தாய் வீட்டில் வைத்திருந்த தனது சுமார் 56 கிராம் தங்க நகைகளை காணவில்லை என முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முக்கூடலை சேர்ந்த பழனி குமார் அவருடைய மனைவி ராஜேஸ்வரி இருவரும் சேர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் இருவரையும் நேற்று (மார்ச் 1) கைது செய்தனர்.

Tags

Next Story