உசிலம்பட்டி-மேட்டுப்பட்டியில் குடும்ப பிரச்சனையில் கணவன்,மனைவி தற்கொலை

உசிலம்பட்டி-மேட்டுப்பட்டியில் குடும்ப பிரச்சனையில் கணவன்,மனைவி தற்கொலை

அரசு மருத்துவமனை

உசிலம்பட்டி-மேட்டுப்பட்டியில் குடும்ப பிரச்சனையில் கணவன்,மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

உசிலம்பட்டி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை. போலீசார் விசாரணை. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேட்டுப்பட்டியில் வசித்து வருபவர் செல்வம் 45.மாட்டு வியாபாரி.

இவருடைய மனைவி வான்மதி 40.; இவர்களுக்குள் குடும்ப பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் செல்வம் வீடு வெகு நேரம் ஆகியும் திறக்கப்படாத நிலையில் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் கணவன் மனைவி விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்ததாக தெரிகிறது.

உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் செல்வம் அவருடைய மனைவி வான்மதி இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஒரே ஊரில் கணவன் மனைவி இருவரும் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story