தகாத உறவில் இருந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

தகாத உறவில் இருந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
கைது செய்யப்பட்டவரின் வீடு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், பாரதி நகர் பகுதியைச் சார்ந்தவர் ராஜா (36). இவருடைய மனைவி ஜெயா (30). ராஜா மெயின் பஜாரில் லாரி கார்களுக்கு பஞ்சர் பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராஜா வீட்டு அருகில் அசர் அலி (32) என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். அசர் அலி சொந்தமாக ஜேசிபி வைத்து தொழில் செய்து வருகிறார். ராஜாவும்,அசர் அலியும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் அசர் அலி ராஜாவின் மனைவி ஜெயாவிடமும் நட்பாக பழகி வந்து உள்ளார் அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் அசர் அலி ஜெயா கள்ள காதல் விவகாரம் ராஜாவுக்கு தெரிய வந்ததை அடுத்து ஜெயா மற்றும் அசர் அலியை பலமுறை ராஜா கண்டித்து வந்து உள்ளார்

இந்த நிலையில் தொடர்ந்து ஜெயா அசர் அலி உடன் தொடர்பில் இருந்து உள்ளார் இதை அடுத்து நேற்று இரவு வேலை தொடர்பாக ராஜா வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது ராஜாவின் மனைவியும் அசர் அலியும் வீட்டில் ஒன்றாக இருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த ராஜா அவருடைய மனைவி ஜெயாவை கம்பால் தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ராஜாவின் மனைவி ஜெயா சாத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர் இந்த நிலையில் சம்பவ இடத்திலிருந்து அசர் அலி தப்பி ஓடிய நிலையில் அசர் அலியின் மூன்று ஜேசிபி வாகனங்களை ராஜா தீ வைத்து கொளுத்தி உள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் நகர் காவல் துறையினர் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story