மனைவியின் கள்ளக்காதலனின் நண்பனை வெட்டிய கணவன் கைது

மனைவியின் கள்ளக்காதலனின் நண்பனை வெட்டிய கணவன் கைது

கள்ளகாதலனை கொலை செய்ய முயற்சி

சேலம் மாவட்டம்,சங்ககிரி அருகே மனைவியிஜ்ன் கள்ளகாதலனின் நண்பரை கொலை செய்ய்ய முயற்சித்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி மேற்கு ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (38) என்பவருக்கும் அரசிராமணி பழக்காரன்காடு பகுதியைச் சேர்ந்த நீலவேணி (34) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி குடித்துவிட்டு கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்த தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீலவேணி கணவனை பிரிந்த தனது இரண்டு குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதனிடையே நீலவேணிக்கும் அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் கோவிந்தன் (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டவே அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த ரமேஷ் கள்ளக்காதலன் கோவிந்தனை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி அடிக்கடி கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையெடுத்து நேற்று இரவு குடிபோதையில் மனைவியின் தாயார் வீட்டிற்கு வந்த ரமேஷ் மனைவி நீலவேணியை வீட்டிற்குள் தேடி உள்ளார்.

அவர் வீட்டில் இல்லாததால் வீட்டின் அருகில் உள்ள பாலத்தின் மீது அமர்ந்திருந்த கள்ளக்காதலன் கோவிந்தன் மற்றும் அவரது நண்பர் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி பகுதி சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுநர் கோபி ( 27) இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கள்ளக்காதலன் கோவிந்தன் ரமேஷை கண்டதும் அலறி அடித்து தப்பிச் சென்றுள்ளார். அவரது அருகில் இருந்த கோபியை ரமேஷ் ஓட ஓட சரமாரியாக அறிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கோபி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தேவூர் போலீசார் ரமேஷை கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆச்சர் படுத்தி சிறையில் அடைத்தனர். சங்ககிரி அருகே மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்ய முயற்சித்தபோது அருகில் இருந்த அவரது நண்பரை அறிவாளால் ஓட ஓட சரமாரியாக வெட்டிய கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story