மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைது

மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைது

மாணிக்கம் 

ஊட்டியில் குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏக்குணி பகுதியை சேர்ந்த சாமு மகன் மாணிக்கம், 60. இவர்களுக்கு பூர்வீகம் பாலக்காடு. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர் . கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி பிரிந்து வாழ்ந்துவந்தார். பங்கஜம் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்த மாணிக்கத்திற்கு , 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள தனியார் தைலம் காய்ச்சும் தொழிற்சாலையில் வேலை செய்கிறார். கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதில் வேதனை அடைந்த பங்கஜம் குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின் மாணிக்கம் சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வந்தார். இந்நிலையில், இன்று காலையில் கணவன் மனைவி இடையே பணம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மாணிக்கம் மனைவியை துண்டால் கழுத்தை நெறித்து தலையை தரையில் அடித்ததில் காயம் ஏற்பட்டது . சம்பவ இடத்திலேயே பங்கஜம் உயிரிழந்தார். மாணிக்கம் வீட்டிலிருந்து வெளியேறி தலைமறைவானார்.

வீட்டில் மற்றொரு அறையில் இருந்த தூங்கி கொண்டிருந்த மகள் அம்மாவை தேடியபோது சமையல் அறையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் புது மந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் ஆய்வாளர் அல்லி ராணி, எஸ்.ஐ., ஆனந்தராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர் . மாணிக்கம் அருகில் இருந்த தைல செட்டில் பதுங்கி இருந்ததை கண்டு போலீஸார் பிடித்து விசாரணை நடத்திய பின், வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story