மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை!

மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை!

காவல் நிலையம்

நகையே அடகு வைத்த தகராறில் மனைவி திட்டியதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி விஜயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய பாண்டி வயது 21 இவர் கடந்த ஆண்டு சரண்யா வயது 17 என்ற சிறுமையை காதலித்து திருமணம் செய்தார். மைனர் பெண்ணை மணந்ததால் விஜயபாண்டி மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து கடந்த மே 25ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜூன் 5ஆம் தேதி நிபந்தனை ஜாமினில் அவர் வெளியே வந்தார். சரண்யாவுக்கு நாலு மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சரண்யாவின் அரைப்பவுன் நகையை விஜய பாண்டி அடகு வைத்தார். இதை மனைவி திருப்பி கேட்டதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று தகராறு ஏற்படவே மனமுடைந்த விஜயபாண்டி வீட்டு உத்திரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story