மனைவி பேசாத விரக்தியில் கணவர் தற்கொலை

மனைவி பேசாத விரக்தியில் கணவர் தற்கொலை
பைல் படம்
குடவாசல் அருகே மனைவி பேசாத விரக்தியில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வளையம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 58. இவர் தினசரி மது அருந்திவிட்டு மனைவி சாந்தி மற்றும் அவரது மகன்களை திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரு மாதமாக மனைவி சாந்தி கணவருடன் பேசாமல் இருந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த கணவர் விஷம் குடித்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story