காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தர கோரி கணவன் புகார்

காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தர கோரி கணவன் புகார்

காணாமல் போன மூதாட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி பகுதியில் மனைவியை காணவில்லை என கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அஞ்சலக தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயா 65 கணவர் பெயர் வடிவேல்75 கடந்த இரவு 10 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் அவரது கணவரும் தூங்கிவிட்டு மறுநாள் காலை 6 மணிக்கு எழுந்து பார்த்த போது அவரது மனைவி காணவில்லை என்றும் அக்கம் பக்கம் விசாரித்துப் பார்த்ததில் மனைவி ஊத்தங்கரை செல்லும் u3 பேருந்தில் ஏறி சென்றதாகவும் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என்றும் காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து கொடுக்கும்படி கணவர் வடிவேல் அளித்த புகாரின் பெயரில் காவல் ஆய்வாளர் தமிழரசி வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story