கள்ளக்குறிச்சி அருகே மனைவி மாயம் என கணவர் புகார்

கள்ளக்குறிச்சி அருகே மனைவி மாயம் என கணவர் புகார்

மனைவி காணவில்லை என கணவன் புகார்

கள்ளகுறிச்சி மாவட்டம், கூத்தக்குடியில் மனைவியைக் காணவில்லை எனகணவர் புகார் அளித்துள்ளார்.

கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி துர்கா, 23; இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 27ம் தேதி உறவினர் வீட்டில் நடந்த சுப நிகழ்ச்சிக்கு மணிகண்டன் சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து மாலை 6:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி துர்காவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story