நில புரோக்கரை தாக்கிய ஒன்றியக்குழு தலைவரின் கணவர் கைது

நில புரோக்கரை தாக்கிய ஒன்றியக்குழு தலைவரின் கணவர் கைது


பாலமுருகன்


சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி ஊராட்சியை சேர்ந்த மொட்டையன் என்பவரின் மகன் பெரியசாமி ( 58). நில புரோக்கர். ஒன்றியக்குழு தலைவர் பிரியாவின் கணவர் பாலமுருகன் (36). இவர்கள் இருவரும் கூட்டாக நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் கமிஷன் தொகையை பங்கு பிரிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பவத்தன்று தகராறு ஏற்படவே ஆத்திரம் அடைந்த பாலமுருகன், கல்லால் பெரிய சாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

Tags

Next Story