காதலனுடன் பைக்கில் சென்ற மனைவி - கொலை செய்ய முயன்ற கணவன்

காதலனுடன் பைக்கில் சென்ற மனைவி - கொலை செய்ய முயன்ற கணவன்

மனைவியை கொலை செய்ய முயன்றவர் கைது

கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை கொலை செய்ய முயன்றவர கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது 28). இவரும் நந்தினி (26) என்பவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே திருமணமான 2 மாதத்திலேயே கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதனால் நந்தினி கணவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நந்தினி தனது அலுவலகத்தில் பணியாற்றும் அசோக்குமார் (29) என்பவருடன் ஒன்றாகவே பைக்கில் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் நந்தினி தனது காதலன் அசோக்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.இதை பார்த்ததும் பிரதீப்குமார், தான் ஓட்டி வந்த காரை அவர்கள் மீது மோத விட்டு கீழே தள்ளினார். இதில் நந்தினி மற்றும் அசோக்குமார் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து நந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் பிரதீப்குமாரை கைது செய்தனர்.

Tags

Next Story