மனைவியை கொல்ல முயன்ற கணவன் கைது

மனைவியை கொல்ல முயன்ற கணவன் கைது
மனைவியை கொல்ல முயன்ற கணவன்
கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் மீது வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த கீழ்நாரியப்பனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36; இவரது மனைவி புஷ்பா, 25; இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 பிள்ளைகள் உள்ளனர். தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். நேற்று மதியம் 12:00 மணியளவில் எஸ்.ஒகையூர் சிறுமங்கலம் சாலை வழியாக புஷ்பா நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த மணிகண்டன், புஷ்பாவை வழிமறித்து திட்டி கொடுவாளால் சரமாரியாக வெட்டினார். இதில், படுகாயமடைந்த புஷ்பா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கீழ்குப்பம் போலீசார், வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.

Tags

Next Story