குடிசை வீடு எரிந்து நாசம்: எம்எல்ஏ நிவாரண உதவி.

மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்து பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ நிவாரண உதவி அளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்டத்திற்கு உட்பட்ட கிராமம் வட இலுப்பையில் பூட்டிய குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த செய்யாறு எம்எல்ஏ ஓ.ஜோதி, வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி ராஜு, வெம்பாக்கம் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் குடிசை வீடு உரிமையாளர் மீனாவுக்கு ரூ.10,000 நிதியுதவி அரிசி, மளிகை, பாய்,தலையனை உள்ளிட்ட பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினர்.

Uஇந்நிகழ்வில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன், ஒன்றிய செயலாளர் ஞானவேல் மற்றும் வருவாய் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story