தொகுதியை முன்மாதிரியாக மாற்றிக் காட்டுவேன். காங்கிரஸ் வேட்பாளர் தாரகை

தொகுதியை முன்மாதிரியாக மாற்றிக் காட்டுவேன். காங்கிரஸ் வேட்பாளர் தாரகை

 தாரகை கத்பட் 

விளவங்கோடு தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பட் உறுதியளித்தார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பட் கூறியதாவது, விளவங்கோடு தொகுதியில் எனக்கு போட்டி யிட வாய்ப்பு வழங்கிய காங் தலைமைக்கும் , தமிழக காங்., தலைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆசியுடன் விளவங்கோடு தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்.தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ்,பாஜக, அதிமுக,நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு வேட்பாளர்களும் பெண் வேட்பாளர்கள் என்பதால் தொகுதியில் தேர்தல் சூடு பிடித்துள்ளது.

Tags

Next Story