மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணி ஆயத்த பயிற்சி

மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணி ஆயத்த பயிற்சி

மாவட்ட ஆட்சியர் 

மீன்வளம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் 11.07.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்ததன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னனை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் 20 உள்நாட்டு கடல் மற்றும் மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப வழிகாட்டுதல்களை மீன்வளம் மற்றும் மீனவர் படிவம் நலத்துறை மற்றும் அரசு இணையதளமான www.fisheries.tn.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைய தளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் எண்.16, 5வது மேற்கு குறுக்கு தெரு, காந்திநகர், காட்பாடி, வேலுார்-632006 அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 18.11.2023 பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அலுவலக தொலைப்பேசி எண். 0416-2240329 மற்றும் adfifvellore1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்

Tags

Next Story