ஓசூரில் மின்கசிவால் ஐஸ்பேக்ட்ரி எரிந்து நாசம்

ஓசூரில் மின்கசிவால் ஐஸ்பேக்ட்ரி எரிந்து நாசம்

ஐஸ் பேக்ட்ரி


ஓசூரில் மின்கசிவால் ஐஸ்பேக்ட்ரி எரிந்து நாசமானது.

ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோ பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (65) இவர் அப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஐஸ் பாக்டரி நடத்தி வருகிறார். இந்த பாக்டரியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை முடிந்ததும் ஐஸ் பாக்டரியை பூட்டி சென்றனர்.

இந்த பாக்டரிக்குள் இன்று காலை திடீரென புகை கசிந்து தீப்பிடித்துள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் பேக்டரியில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சு அடித்து நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் ஐஸ் பாக்டரியிலிருந்த 15க்கு மேற்பட்ட ஐஸ் பெட்டிகள் தீயில் எறிந்து சேதமானது. இதன் மதிப்பு 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக பேக்டரியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Tags

Next Story