தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

திருக்காட்டுப்பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.


திருக்காட்டுப்பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளி அருகே கருப்பூரில் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 31 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.15 கோடி வங்கி கடனுதவி, திருவையாறு ஒன்றிய ஊராட்சிகளின் 155 தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய அடையாளஅட்டை வழங்கப்பட்டது. தாட்கோ மேலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். இதில் திருவையாறு, தஞ்சாவூர், பூதலூர், மாத்தூர், சுக்காம்பார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து 31 மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிகுழுவினரும், திருவையாறு ஒன்றியத்தின் 40 ஊராட்சிகளில் பணியாற்றும் 155க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் திருவையாறு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபாஷினி, ஸ்டாலின், தாட்கோ உதவி மேலாளர் ராஜ்குமார், தூய்மைப்பணி நல வாரிய உறுப்பினர் குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story