பாஜ வந்தால் இந்தியாவில் தேர்தலே நடக்காது - நடிகர் வாகை சந்திரசேகர்

பாஜ வந்தால் இந்தியாவில் தேர்தலே நடக்காது - நடிகர் வாகை சந்திரசேகர்

பாஜ ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தலே நடக்காது என நடிகர் வாகை சந்திரசேகர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார். 

பாஜ ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தலே நடக்காது என நடிகர் வாகை சந்திரசேகர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் இந்தியா கூட்டணியின் திமுக மற்றும் தோழமை கூட்டணி கட்சிகளின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அருண்நேரு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நம்பர் 1 டோல்கேட்டில் நடிகர் வாகை சந்திரசேகர் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது , பிஜேபி ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடக்காது ,பாராளுமன்றம் இருக்காது, மந்திரி சபை இருக்காது, சட்டசபை இருக்காது எம்எல்ஏ இருக்காது, ராணுவ ஆட்சி இருக்கும். சர்வாதிகார ஆட்சி நடக்கும்.தமிழக முதல்வர் எங்கு சென்றாலும் எழுச்சியும் வரவேற்பும் இருக்கிறது. தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார்.அதில் மகளிருக்காண ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டம், மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை திட்டம் கொண்டு வந்துள்ளார். அதைவிட சிறந்த திட்டம் காலை உணவு திட்டம் காமராஜர் மதிய உணவு கொண்டு வந்தார்,

எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். கலைஞர் ஊட்டச்சத்து நிறைந்த முட்டை வாழைப்பழம் திட்டத்தை கொண்டு வந்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் 16 லட்சம் குழந்தைகள் காலை உணவு அருந்துகின்றனர் .பிஜேபி ஆட்சிக்கு முடிவு கட்ட இந்திய கூட்டணிக்கு வாக்களியுங்கள் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கே. பி .ஏ.செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story