பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை

எஸ்பி சஷாங் சாய் 

விழுப்புரம் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியான முறையிலும் புத்தாண்டை கொண்டாட மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 1,270 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை ) மாலை முதல் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை மேற் கொள்ளப்பட உள்ளது. நள்ளிரவுக்கு பிறகு மோட்டார் வாகனங் களில் தேவையின்றி சுற்றக்கூடாது, நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்கள் இருக்கக்கூடாது.

முதல்நாள் இரவும், புத்தாண்டின்போதும் கடற்கரைகளில் பொதுமக்கள், கடல்நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எக்காரணத்தை கொண்டும் அதிவேகமாகவும், சாகச பயணமாகவும் பைக்ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது, மேலும் வழிபாட்டு தலங்களில் குழப்பம் விளைவிக்க முனைவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் போதிய ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சட்டத்துக்கு உட்பட்டு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனங்கள் மூலமும் ரோந்துப்பணி மேற்கொள்ளப்படும். எனவே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது யாரேனும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், எந்தவித அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டாக கொண்டாட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story