திருக்குறளை மனதில் பாடமாக கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்

திருக்குறளை மனப்பாடம் செய்வதை விட, மனதில் பாடமாக கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என கரூரை சேர்ந்த செங்குட்டுவன் கூறினார்.

வாழ்வியல் நாயகன் வள்ளுவப் பெருந்தகை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் செங்குட்டுவன். கரூர் மாவட்டத்தில், வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி, வள்ளுவர் உணவகம்,பெட்ரோல் பங்க் போன்றவை நடத்தி வருகிறார். வள்ளுவர் பிறந்த தினமான இன்று 20 குறள்களை ஒப்புவித்து விளக்கம் அளித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு என அறிவித்தார். இது தொடர்பாக செய்தியாளிடம் தெரிவித்த அவர், வாழ்வியல் நாயகன் வள்ளுவர் பெருந்தகை வழங்கிய நூல்களில் உள்ள கருத்துக்களை மனப்பாடம் செய்வதை விட, மனதில் பாடமாகக் கொண்டால் வாழ்வில் வெற்றி அடையலாம் எனக் கூறினார்.

Tags

Next Story