ஆடுதுறை பேரூராட்சியில் இப்தார் விருந்து ஆலோசனைக் கூட்டம்

ஆடுதுறை பேரூராட்சியில் இப்தார் விருந்து ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

ஆடுதுறை பேரூராட்சி சார்பில் ரம்ஜான் இப்தார் விருந்து நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் புனிதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு நோற்பது கடமையாகும் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று நோன்பு திறக்கும் நிகழ்விற்கு இஃப்த்தார் என்றும் அழைப்பார்கள் அப்படிப்பட்ட நிகழ்வை தமிழ் நாட்டிலேயே மனிதநேயம் போற்றும் வகையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை பேரூராட்சி மன்றம் சார்பில் பேரூராட்சி மன்ற தலைவர் ம.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு இஃப்த்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. சென்ற ஆண்டு நடைப்பெற்றது போல் இந்த இந்த ஆண்டும் இஃப்த்தார் நிகழ்ச்சி நடத்துவது பற்றி பேரூராட்சி மன்ற தலைவர் ம.க. ஸ்டாலின் இல்லத்தில் ஆலோசிக்கப்பட்டபோது பேரூராட்சி மன்ற தலைவர் ம.க. ஸ்டாலின் ஆவணியாபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராயல் க. நசீர் முஹம்மது ஆவை ஷாஜஹான் புருனை ஹாஜா நஜிபுதீன் ஆடுதுறை 1-வது வார்டு கவுன்சிலர் M.ஷாஜஹான் கலந்துகொண்டு கொண்டனர் .

Tags

Next Story