நாகூர் தர்காவில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு

நாகூர் தர்காவில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு

இப்தார் நோன்பு

நாகூர் இளைஞர் பொதுநல சங்கத்தின் சார்பில் நாகூர் தர்காவில் நடைபெற்ற மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கலந்து கொண்டார்.
உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நாகூர் இளைஞர் பொதுநல சங்கத்தின் சார்பாக மதநல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற நோன்பு நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களோடு நாகூர் புனித பாத்திமா பேராலய அருட்தந்தை அந்தோணிசாமி, வர்த்தகர்கள், சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். சரியாக 6.25 மணிக்கு சிறப்பு துவா செய்து தொடங்கிய இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் நோன்பு கஞ்சி, புரதசத்துள்ள பேரிச்சை என அறுசுவை உணவுப்பொருட்களை அனைவரும் சாப்பிட்டு நோன்பு திறந்தனர்.

Tags

Next Story