ஐ.ஐ.டி. அமைக்க நடவடிக்கை : அ.தி.மு.க. வேட்பாளர் உறுதி

ஐ.ஐ.டி. அமைக்க நடவடிக்கை : அ.தி.மு.க. வேட்பாளர்  உறுதி

வாக்கு சேகரிப்பு 

இளைஞர்கள் முன்னேற்றத்துக்காக தூத்துக்குடியில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி கூறினார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவரை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு வந்து வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட தொடங்கி உள்ளார். நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்து வருகிறார். நேற்று காலையில் தூத்துக்குடி ரோச் பூங்காவுக்கு சென்றார். அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி அவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story