பெரம்பலூரில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் பிரச்சாரம்

பெரம்பலூரில்  ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் பிரச்சாரம்

பாரிவேந்தர் பிரசாரம் 

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர், சிறுகனூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் உயர் மட்ட மேம்பாலங்களை கட்டிக் கொடுத்துள்ள தனக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என பெரம்பலூரில் நடந்த பிரசாரத்தின் போது பாரிவேந்தர் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன பாரிவேந்தர், பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார், இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குணம், கல்பாடி, சிறுவாச்சூர், வேலூர், அம்மாபாளையம், செங்குணம் மற்றும் எசனை உள்ளிட்ட பல பகுதிகளில் பாரிவேந்தர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பாரிவேந்தர் பேசிய போது. நான் எம்பி ஆக இருந்தபோது தொகுதியில் செய்த பணிகள், குறித்து புத்தகமா உங்களுக்கு வழங்கி உள்ளேன். தொகுதியில் உள்ள 1200 மாணவர்களை இலவசமாக படிக்க வைத்து பட்டதாரிகளாக உள்ளனர் அதனால் அவர்களின் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை தேர்ந்தெடுத்தால் 1500 குடும்பங்களை தேர்ந்தெடுத்து தலா ரூ 10 லட்சம் மதிப்பில் உயர் மருத்துவம் வழங்கப்படும்.

மேலும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மற்றும் சிறுகனூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று உயர் மட்ட மேம்பாலம் கட்டிக் கொடுத்துள்ளேன். நான் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தான் அரசியலுக்கு வந்துள்ளேன் சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விடுங்கள், உங்கள் குழந்தை படிக்க வேண்டு மென்றால் கல்வி தெய்வமான சரஸ்வதியின் பீடமான தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.

Tags

Next Story