தொழிலாளர்களை கௌரவித்த ஐ ஜே கே மாவட்ட தலைவர்

தொழிலாளர்களை கௌரவித்த ஐ ஜே கே மாவட்ட தலைவர்

திருக்கோவிலூரில் மேதினத்தை முன்னிட்டு ஐ ஜே கே மாவட்ட தலைவர் தொழிலாளர்களை கௌரவித்தார்.


திருக்கோவிலூரில் மேதினத்தை முன்னிட்டு ஐ ஜே கே மாவட்ட தலைவர் தொழிலாளர்களை கௌரவித்தார்.
திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி ஊராட்சியில் இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சுமை தூக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கும் விதமாக இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில், விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் செந்தில்குமார் தொழிலாளிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்பு மற்றும் குளிர்பானங்களை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மனோ ,ஐஜேகே மாநிலம் மகளிர் அணி துணைச் செயலாளர் தேவி பாலமுருகன், ஐ ஜே கே நிர்வாகிகள் சிதம்பரம், ராதாகிருஷ்ணன், ஏழுமலை, குபேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story