இலக்கிய வானம் நிகழ்ச்சி

இலக்கிய வானம் நிகழ்ச்சி

சங்கரன்கோவிலில் இலக்கிய வானம் நிகழ்ச்சி நடைபெற்றது.


சங்கரன்கோவிலில் இலக்கிய வானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்கம் சாா்பில் எழுத்தாளா் உதயசங்கருக்கு சங்கரன்கோவிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில், அவரது சாகித்யபால புரஸ்கா் விருது பெற்ற ஆதனின் பொம்மை நூல் குறித்து 18 மாணவா்கள் பேசினா். சாகித்ய அகாதெமியின் பால புரஸ்கா் விருது, தமிழக அரசின் தமிழ்செம்மல் விருது பெற்ற எழுத்தாளா் உதயசங்கருக்குப் பாராட்டு விழா சி.எஸ்.எம்.எஸ்.சங்கரசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. பேரரசிஇலக்கியா, சீதாலெட்சுமி, செ.அமிா்தகல்யாணி, மாடசாமி, மணிதிருமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் மு.சு. மதியழகன் வரவேற்றாா். இதைத் தொடா்ந்து ஆதனின் பொம்மை நூல் குறித்து கோமதிஅம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கு. அஜய், ப. ஆனந்தகுமாா், அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த எஸ்.ஜெயஸ்ரீ,த.ஷிவானி, ஸ்ரீவையாபுரிவித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி எம். அபிநயா, மாணவா் அன்புச்செழியன், ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆ.பா. ராகவி, நீ. அருண்யாகௌரி உள்ளிட்ட 18 மாணவா்கள் மற்றும் தமுஎகச செயற்குழு உறுப்பினா் மு. சண்முகசுந்தரம் ஆகியோா் பேசினா்.

இதைத் தொடா்ந்து எழுத்தாளா் உதயசங்கரை பாராட்டி இரா. நடராஜன், ந. செந்தில்வேல் ஆகியோா் பேசினா். ஆதனின்பொம்மை இளையோா் நாவல் உருவானது குறித்து எழுத்தாளா் உதயசங்கா் பேசினாா். பின்னா் மாணவா்கள் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கினா். நகரத் தலைவா் ப.தண்டபாணி நன்றி கூறினாா். நகரச் செயலா் மூா்த்தி நிகழ்ச்சிகளைத் தொகுத்துப் பேசினாா். ஏற்பாடுகளை சங்கரன்கோவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தினா் செய்திருந்தனா்.

Tags

Read MoreRead Less
Next Story