இளங்கார்குடி முத்து மாரியம்மன் கோவில் பால்குடம் திருவிழா

இளங்கர்குடி காவிரி தென்கரையிலிருந்து பால்குடம், காவடி ,அலகு காவடி,அக்கினி கொப்பரை,வேல் காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா இளங்கர்குடி கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர், முத்து மாரியம்மன், நாக கன்னிகை மற்றும் பரிவார தெய்வங்கள் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அது சமயம் இளங்கர்குடி காவிரி தென்கரையிலிருந்து பால்குடம், காவடி ,அலகு காவடி,அக்கினி கொப்பரை,வேல் காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினார்கள் பின் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை இளங்கார்குடி கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story