இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் துவக்கம் நிகழ்ச்சி

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் துவக்கம் நிகழ்ச்சி
கடையநல்லூரில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் துவக்கம் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் திமுகவினர் சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் துவக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் 14 வது வார்டில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற திண்ணை பிரச்சாரம் நிகழ்ச்சி நேற்று மாலையில் நடைபெற்றது. இதனை கடையநல்லூர் நகர் அவைத் தலைவர் பெட்டி முருகன் தலைமையில் வார்டு செயலாளர் ராமைய்யா, கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபூர் ரஹ்மான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராம முருகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மொகிதீன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் திமுக கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

Tags

Next Story